Notify Blogger about objectionable content.
What does this mean?
Send As SMS
BlogThis!
இணைந்து இருங்கள்
[Eurobird 9] Star Vijay TV has launched in Europe again on Eurobird 9A (9 degree East)
பெப்ரவரி 21 இல் இணைத் தலைமைகளின் தொலைத் தொடர்பு மாநாடு.
21 February 2007
இலங்கை சமாதான நடவடிக்கைகளுக்கான இணைத் தலைமைகளான அமெரிக்கா, நோர்வே, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இவ்வாரத்தின் முற்பகுதியில் தொலைத்தொடர்பு மாநாடொன்றை (Tele Conference) நடத்த விருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறானதொரு மாநாடு நடைபெறவிருப்பதை இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதரக வட்டாரங்களும் உறுதிப்படுத்தின. அத்துடன், இந்த தொலைத் தொடர்பு மாநாடு அநேகமாக எதிர்வரும் புதன்கிழமை நடைபெறக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.கடந்த நாட்களில் இலங்கையில் மனிதாபிமான நெருக்கடிகளும், மனித உரிமை மீறல்களும் அதிகரித்து விட்டதாக சர்வதேச ஸ்தாபனங்கள் சுட்டிக்காட்டும் நிலைமையிலும் போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தாகி 5 வருட பூர்த்தியை நிறைவு செய்யவிருக்கும் தருணத்திலுமே இணைத்தலைமை நாடுகளின் இந்த விசேட மாநாடு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.போர் நிறுத்த உடன்படிக்கை 5 வயதை பூர்த்தி செய்யும் தினமான பெப்ரவரி 22 ஆம் திகதிக்கு முன்தினம் இம் மாநாடு நடைபெறவிருப்பதால் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இணைத் தலைமை நடுகளின் பிரதிநிதிகள் அந்தந்த நாடுகளின் தலை நகரங்களில் இருந்து சம நேரத்தில் தொலைத் தொடர்புகள் மூலம் இலங்கையின் நிலைவரங்கள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளன.இம் மாநாட்டில் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், நோர்வேயின் விசேட சமாதான தூதுவர் ஜொன் ஹன்சன் பௌர், அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர், ஜப்பானின் சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி ஆகியோர் தொலைத் தொடர்புகள் மூலம் நிலைமைகளை ஆராய விருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இதேநேரம், இம் மாநாட்டின் போது இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும் பேச்சு மேசைக்கு வரவழைப்பதற்கு கொடுக்க வேண்டிய அழுத்தங்கள் குறித்து இணைத் தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் தீவிர கவனம் செலுத்தவரெனவும் சுட்டிக் காட்டப்படுகிறது.இதேவேளை, இலங்கை அரசாங்கமும் சரி, புலிகளும் சரி இரு தரப்பினருமே போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகவில்லையென தங்களுக்கு அறிவித்திருப்பதாக நோர்வே அனுசரணையாளர்கள் தெரிவித்திருக்கும் அதேநேரம், போர் நிறுத்த உடன்படிக்கையென்பது தவறுதலாக இடம்பெற்றதொரு விடயமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பேட்டியொன்றில் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
posted by Norsri @
Wednesday, February 21, 2007
கொழும்பில் 64 பெண்கள் உட்பட 300 க்கும் அதிகமான தமிழர்கள் கைது,
04 February 2007
கொழும்பில் தங்கி இருந்த 300க்கும் மேற்பட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த தமிழர்கள் நேற்று சனிக்கிழமை அதிகாலை முதல் மாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு தேடுதல்களின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவிருக்கும் இலங்கையின் 59 ஆவது சுதந்திர தின பாதுகாப்பிற்கான முன்னோடி நடவடிக்கையாகவே சந்தேகத்திற்கிடமானவர்களை தாங்கள் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் புறக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டாம் வீதி, சோனகத் தெரு, ஆட்டுப்பட்டித் தெரு, குணசிங்புர, செட்டித்தெரு, கதிரேசன் வீதி, சென்ட்ரல் வீதி பகுதிகளிலுள்ள தங்குமிடங்கள் கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விவேகானந்தா மேட்டுத்தெரு, ஜம்பட்டா வீதி, கொட்டாஞ்சேனை, ஆமர் வீதி போன்ற இடங்களிலிருக்கும் தங்குமிடங்கள் ஆகியவற்றையும் கொழும்பு புறநகர் கிருலப்பனை ஹெவ்லொக் வீதி, பாமன்கடை, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, முகத்துவாரம், கிரேண்ட் பாஸ், தெமட்ட கொடை, மருதானை ஆகிய பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான இடங்களும் தங்குமிடங்களும் சுற்றி வளைப்பு தேடுதல்களுக்கு உட்படுத்தப்பட்டு சந்தேகத்தின் பேரில் கைதுகள் இடம்பெற்றன. கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பெண்களும் அடங்குகின்றனர்.
இவர்கள் அனைவரும் தாம் கொழும்பிற்கு வந்து தங்கி இருப்பதற்காக தகுந்த ஆதாரங்கள் தங்களை அடையாளப்படுத்தும் அடையாள அட்டை உட்பட்ட அரசாங்கம் வழங்கியுள்ள அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்த நிலையிலேயே கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட இந்த கைதுகள் அதிகாலை 4 மணி முதல் மாலை வரை இடம்பெற்றுள்ளதுடன் சிலர் இரவு உடைகளுடனும் அரைகுறை ஆடைகளுடனும் வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர்.
கைதாகியுள்ளவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்கு செல்ல வந்திருந்தவர்களாவர். மேலும் சிலர் திருமணங்கள், கல்வி நடவடிக்கைகள், இந்தியா செல்வதற்கு, மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ள மற்றும் தொழில் நிமித்தம் கொழும்பிற்கு வந்து தங்கி இருந்தவர்களாவர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட மலையகம் மற்றும் அண்மைக் காலத்தில் தென்பகுதியிலிருந்து கொழும்புக்கு வந்திருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
பாதுகாப்பு காரணங்களுக்கென கூறி சந்தேகத்தின் பேரில் அப்பாவி தமிழர்களை கைது செய்துள்ள பொலிஸாரின் நடவடிக்கை தமிழர்கள் மத்தியில் சுதந்திரத்தை தட்டிப் பறிக்கும் நிகழ்வாக அமைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூறினர். கைதானவர்களின் விடுதலைக்கு உதவுமாறு தமிழ் அரசியல் வாதிகளிடம் கோரிக்கைகளையும் அவர்கள் விடுத்துள்ளனர்.
இக் கைது நடவடிக்கைகள் தொடர்பாக புறக்கோட்டை பொலிஸாரிடம் கேட்ட போது சுதந்திர தின வைபவங்களை குழப்பியடிக்கும் நோக்கில் கொழுற்பிற்குள் ஊடுருவியுள்ள புலிகள் மறைமுக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ள நிலையில் பாதுகாப்பு கருதி சந்தேகத்திற்கிடமான 63 பேரை தாங்கள் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். இவர்களில் ஏராளமானோர் தங்குமிடங்களில் வைத்தே கைதாகியுள்ளார்.
குறிப்பிட்ட இந்த சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கைகளுக்கு கொழும்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சர் நால்வர் தலைமை தாங்கியுள்ளனர்.
posted by Norsri @
Sunday, February 04, 2007
ஆயுதங்களை கைவிட்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் - வாகரையில் ஜனாதிபதி அறிவிப்பு;
ஆயுதங்களை கையளித்து விட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று சனிக்கிழமை விடுதலைப் புலிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் அரச படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ள வாகரைக்கு நேற்றுக்காலை விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, புலிகளை மடக்கி பொதுமக்களை விடுவிக்கப்போவதாக சூளுரைத்திருக்கும் அதேசமயம், சமாதானப் பேச்சை ஆரம்பிப்பதற்கு கதவுகள் தற்போதும் திறந்திருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.
வாகரை விஜயத்தின்போது ஊடகவியலாளர் மத்தியில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, அரசியல் தீர்வுத் திட்டத்தை புலிகளுக்கு வழங்கத் தான் தயாராக இருப்பதாகவும் ஆனால், விடுதலைப் புலிகள் ஆயுதக் கையளிப்பை ஆரம்பிக்க வேண்டியது அவசியமெனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
"ஆயுதங்களை சரணடையச் செய்வதை அவர்கள் ஆரம்பித்து விட்டு பேச்சுவார்த்தைக்கு வருவது அவசியம். பயங்கரவாதிகளிடமிருந்து நாம் பொதுமக்களை விடுவித்திருக்கிறோம். புலிகளை நாம் மடக்க வேண்டியுள்ளது. பொதுமக்களை விடுவிக்க இரு வழிமுறைகள் உள்ளன. நாங்கள் அரசியல் தீர்வை முன்வைக்கவுள்ளோம். இராணுவத் தீர்வை விரும்பவில்லை. மக்களைக் கொன்று தமது ஆயுதபலத்தை காட்டுவதற்கு முயற்சிக்காமல் பேச்சு மேசைக்கு அவர்கள் வரவேண்டிய முக்கியமான தருணம் இதுவாகும். அவர்களை (புலிகளை) பேச்சுவார்த்தை மேசைக்கு வர வழைக்க என்னால் முடிந்தளவுக்கு நான் முயற்சிப்பேன். இது எனது கடமை. அவர்கள் நிராகரித்துக் கொண்டிருக்கின்றனர். ஆயினும், அரசாங்கம் என்ற ரீதியில் நாம் அவர்களுடன் பேச்சுக்கு தயாராக இருக்கிறோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.
அதேசமயம், பொது மக்களில் ஒருவருக்குக் கூட உயிரிழப்பு இல்லாமல் அந்தப் பகுதியில் விடுவித்ததற்காக படையினருக்கு நன்றி தெரிவிக்கவே தான் அங்கு வருகை தந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டதாக ஏ.எவ்.பி.செய்திச் சேவை தெரிவித்தது.
அத்துடன், கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களை வரவழைத்து அவர்களின் அரசாங்கங்களும் மக்களும் நிதியை அனுப்பியிருந்ததால் அந்தப் பணம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை காண்பிக்க விரும்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்ததுடன் அடுத்த இரு வாரங்களுக்குள் கண்ணிவெடிகளை அகற்றும் பணியை ஆரம்பித்து பொது மக்கள் திரும்பி வருவதற்கு அனுமதி வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார்.
தளபாடங்களைப் பெற்று முழு அளவிலான அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பிக்க வேண்டுமென்றும் வீடுகளை நிர்மாணிக்க விரும்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.
புலிகள் ஜனநாயக வழிக்கு வருவதற்கு இது சிறந்த சந்தர்ப்பம் என்றும் `யுத்த நிறுத்தம்' யுத்த நிறுத்தமாக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
இதேவேளை , கொழும்பிலிருந்து காலை 8.30 மணிக்கு 5 ஹெலிகொப்டர்களில் வாகரைக்கு சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் பிரதேச செயலகத்தில் பொதுமக்களையும் சந்தித்துள்ளனர்.
இங்கு ஜனாதிபதிக்கு இந்து மத முறைப்படி வரவேற்பளிக்கப்பட்டு, பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
அங்கு இருந்த மக்கள் தம்மை மீளக்குடியமர்த்துவதுடன், தமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்யுமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி மீள்குடியேற்றத்திற்கு சகல வித ஒத்துழைப்புகளையும் அரசு வழங்குமென்றும் மக்களை அச்சமின்றி மீளக்குடியேற்றலாமெனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மீனவர்களுக்குரிய படகுகளை பெற்றுக்கொடுக்குமாறும் அவர்களின் தொழில் நடவடிக்கைகள் மேம்பட உதவுமாறும் அமைச்சர்களிடம் பணித்துள்ளார்.
பின்னர் வாகரை பொலிஸ் நிலையம் சென்றுள்ள ஜனாதிபதி அங்கு பொலிஸாருடன் கலந்துரையாடியதுடன், மக்களுடன் சிநேகபூர்வ உறவை ஏற்படுத்திக்கொள்ளுமாறும் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து, வாகரை வைத்தியசாலைக்கு சென்றுள்ள ஜனாதிபதி அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் வைத்தியர்களுடன் வைத்தியசாலையின் தேவைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
இதேநேரம், ஜனாதிபதி வாகரையை புலிகளிடமிருந்து மீட்பதற்கான படை நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ வீரர்களை சந்தித்து அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்ததுடன் அவர்களுக்கு சுதந்திரதின வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
பின்னர் வாகரையிலிருந்து சம்பூருக்கு சென்றுள்ள ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் அங்கு வெளிச்ச வீட்டை பார்வையிட்டுள்ளதுடன் அங்குள்ள கடற்படை தளத்திற்கும் விஜயம் செய்துள்ளார்.
சம்பூர் அதனையொட்டிய பகுதிகளை மீட்பதில் பங்காற்றிய படை வீரர்கள் மற்றும் அங்கு கடமையில் ஈடுபட்டுள்ள படைவீரர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளதுடன், சுதந்திர தின வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் சம்பூரிலிருந்து மின்னேரியா இராணுவ முகாமுக்கு சென்றுள்ள ஜனாதிபதி அங்குள்ள படைவீரர்களுடனும் கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதியுடனான இவ்விஜயத்தில் அமைச்சர்களான நிமால் சிறிபால டீ சில்வா, றிஷாத் பதியுதீன், அமீர் அலி, பிரதியமைச்சர் வடிவேல் சுரேஷ், முப்படைத்தளபதிகள், பாதுகாப்பமைச்சின் செயலர் கோதாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, இவ்விஜயங்கள் குறித்து மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு எதுவுமே அறிவிக்கப்படவில்லை எனவும் அவ்வாறே வாகரையை சென்றடையும் வரை சில அமைச்சர்களுக்கு தாம் எங்கு செல்கிறோம் என்ற விபரம் கூட அறிவிக்கப்படவில்லையென அறியவருகிறது.
posted by Norsri @
Sunday, February 04, 2007
பிரதான செய்திகள்
வடிவேலுக்கு ஐந்தாண்டு தடை
வைகைப்புயலின் வேகம்...
நான் கடவுள்: பிரமிக்க வைக்கும் பாலா!
நான் பாலாவின் ரசிகன் - மணிரத்னம்
ரஜினியின் சுல்தான்!'சிவாஜி' படத்தின் சாதனையை முறிய...
மக்களுக்காகவே படம் இயக்குகிறேன்" - மணிரத்னம்
தசாவதாரம் பட பிரச்சினையில் என்னை வீழ்த்த கட்ட பஞ்ச...
பெப்ரவரி 21 இல் இணைத் தலைமைகளின் தொலைத் தொடர்பு மா...
கொழும்பில் 64 பெண்கள் உட்பட 300 க்கும் அதிகமான தமி...
ஆயுதங்களை கைவிட்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் - வா...
பெட்டகம்
October 2006
November 2006
December 2006
January 2007
February 2007
April 2007
November 2007
December 2007
January 2009
May 2011
இணையசெய்திகள்
நிதர்சனம்
தமிழ்நாதம்
பதிவு
அதிர்வு
யாழ் இணையம்
நெருடல்
ஈழம் நியூஸ்
சங்கதி
வெப் உலகம்
இணையம்
தொலைக்காட்சிகள்
தீபம்
ரிவி ஐ
லங்காஸ்ரீ ரிவி
சக்தி ரிவி
தமிழ் விசன்
சிகரம் ரிவி
தமிழ் ரிவி
வானொலிகள்
ஐ.பி.சி தமிழ்
புலிகளின் குரல்
உலகத் தமிழோசை
சக்தி எஃப்.எம்
கனேடிய தமிழ் வானொலி
அவுஸ்திரேலிய தமிழ் ஒ..கூட்டு..
தாளம்
குழந்தைப் பெயர்கள்
தமிழ் பெயர்கள்
தமிழ் பெயர்கள்
தமிழ் பெயர்கள்
தமிழ் பெயர்கள்
தொழில்நுட்பம்
vaddakkachchi
technocadd
java sun
wntechnology
பாடசாலை தளங்கள்
ஹாட்லி கல்லூரி
யாழ். இந்துக் கல்லூரி
திருகோணமலை இந்துக்
kokuvilhindu
Universities
stpatrickscollege
Jaffna Hindu
அறுசுவை
அறுசுவை
அறுசுவை
அறுசுவை
MP3 பாடல்கள்
MP3
MP3
MP3
MP3
திருமண தளங்கள்
திருமண தளங்கள்
குழந்தைகளுக்கானபக்கம்
தமிழ் கற்பதற்கு
தமிழ் கற்பதற்கு
கவிதைகள்
kavimalar
kavithai
தமிழ் சஞ்சிகைகள்
வீரகேசரி
உதயன்
ஈழநாடு
சுடர் ஒளி
நக்கீரன்
சினிமா பக்கங்கள்
சினிமாமலர்
தமிழ் சினிமா
சினிமா சௌத்
இம்சை அரசன்
சமூக இணைப்புகள்
தமிழ்ச் சமூகம்
தமிழ் Stepith
நடிகர்கள் தளங்கள்
vikram
Surya
Arjun
Vijaykant
Vijay
Ajith >
விளம்பரம்
கம்ப்யுட்டர் கல்வி
இணைய மொழி
இன்டர் நெட்
நான் பார்ப்பவை
© proudly powered by 2006.
norsri.blogspot.com
நீங்கள் இந்த வலைக்கு
பார்வையாளராக வருகை நன்றி.