இணைந்து இருங்கள்

 
[Eurobird 9] Star Vijay TV has launched in Europe again on Eurobird 9A (9 degree East)


வானத்தில் காமராக்கள் பல வலம்வருவது...
10 January 2007
உங்கள் வீட்டுக்குப் பின்னால் நீங்கள் புதிதாக ஒரு அறை கட்டுகிறீர்கள். வானில் சுமார் 600 கிலோ மீட்டர் உயரத்தில் பறக்கிற ஒரு செயற்கைக்கோள் நீங்கள் புது அறை கட்டியுள்ளதைப் படம் பிடித்துக் காட்டி விடலாம். வயலாக இருந்த இடத்தில் புதிதாக மாவு மில் அதையும் அந்த செயற்கைக்கோள் படம் பிடித்துவிடும். ஒரு நகருக்கு அருகே புதிதாக குடிசைப் பகுதிகள் முளைக்குமானால் செயற்கைக்கோள் படம் மூலம் அதைத் தெரிந்து கொண்டுவிடலாம்.
வானில் இந்தியா செலுத்துகிற கார்ட்டோசாட்-2 செயற்கைக்கோளில் இடம் பெற்றுள்ள காமிராக்கள் அந்த அளவுக்குத் துல்லியமாகப் படம் எடுக்கும் திறன் படைத்தவை. ஒரு மீட்டருக்கு மேல் நீளம் கொண்ட எந்தப் பொருளையும் இது படம் பிடித்து விடும். இது ஒரு மீட்டர் தெளிவுத் திறன் (One Meter Resolution எனப்படும்.
வானிலிருந்து படம் பிடித்து அனுப்புவதற்கென அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ் முதலான நாடுகள் மற்றும் அமெரிக்கத் தனியார் நிறுவனங்கள் ஆகியவை செயற்கைக்கோளை உயரே செலுத்தியுள்ளன. எனினும் எந்த அளவு தெளிவான படங்களைப் பிடிக்கின்றன என்பதில் இவற்றின் இடையே வித்தியாசம் உண்டு. உதாரணமாக பிரான்ஸின் சமீபத்திய "ஸ்பாட்' செயற்கைக்கோளினால் 2.5 மீட்டருக்கு மேல் உள்ள பொருளை மட்டுமே படம் பிடிக்க இயலும். "ஐகோனாஸ்' என்னும் அமெரிக்கத் தனியார் நிறுவனத்தின் செயற்கைக்கோள் கார்ட்டோசாட்-2 போலவே ஒரு மீட்டர் தெளிவுத் திறன் கொண்டது. ஆனால் குவிக்பர்ட் எனப்படும் செயற்கைக்கோளின் தெளிவுத் திறன் 60 செண்டிமீட்டர்.
வேறு விதமாகச் சொல்வதானால் இந்த விடயத்தில் உலகிலேயே மிகத் துல்லியமாகப் படம் பிடிக்கிற செயற்கைக்கோள்களில் கார்டோசாட்-2 இரண்டாவது இடம் வகிப்பதாகச் சொல்லலாம். இந்தியா 1979-ஆம் ஆண்டில் தொடங்கி வானிலிருந்து படம் எடுக்கும் செயற்கைக்கோள்களை செலுத்தி வருகிறது. முதல் இரண்டு செயற்கைக்கோள்களுக்கும் பாஸ்கரா என்று பெயர் வைக்கப்பட்டது. 1988-ல் தொடங்கி இவை ஐ.ஆர்.எஸ். செயற்கைக்கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பொதுவில் தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் எனப்படுகின்றன.
வானிலிருந்து படம் பிடிக்கிற செயற்கைக்கோள்கள் பொதுவில் பூமியை வடக்கிலிருந்து தெற்காகச் சுற்றுபவை. இவை கீழே பூமியில் நிலப் பகுதியிலும், கடல் பகுதியிலும் உள்ள அனைத்தையும் படம் பிடித்துக்காட்டுபவை.
குறிப்பிட்ட பிராந்தியத்தில் பயிர்களை பூச்சி தாக்கியுள்ளதா? மழையால் குடியிருப்புப் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளனவா? சுனாமி போன்ற பேரழிவின் போது பாதிப்பு எவ்வளவு? காடுகளின் நிலப்பரப்பு குறைந்து வருகிறதா என எண்ணற்ற தகவல்களை இந்த செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடியும். ஐ.ஆர்.எஸ் வகையைச் சேர்ந்த 6 செயற்கைக்கோள்கள் இப்போது உயரே செயலில் உள்ளன. இவை ஒவ்வொன்றும் தினமும் முற்பகலில் குறிப்பிட்ட நேரத்துக்கு இந்தியாவுக்கு நேர் மேலே பறந்தபடி தெற்கு நோக்கிச் சென்றவாறு படம் பிடித்து அனுப்பும். இவை ஒவ்வொன்றும் ஒரு சமயத்தில் இந்திய நிலப்பரப்பின் குறிப்பிட்ட பகுதியை நீண்ட பட்டை போல படம் பிடிக்கும். இப்படியான படங்களை பக்கம் பக்கமாக வைத்தால் இந்தியாவின் முழுப் படம் தெரியும்.
இந்த வகை செயற்கைக்கோள்கள் பூமியைச் சுற்றுகிற அதே நேரத்தில் பூமி தனது அச்சில் சுழன்று கொண்டிருக்கும். ஆகவே ஐ.ஆர்.எஸ். செயற்கைக்கோள் ஒன்று கீழே இந்தியாவின் ஒரு பகுதியை படம் பிடித்து பின்னர் 5 நாள் கழித்துத்தான் அப் பகுதி மீதாக வரும். இதனை மனதில் கொண்டு இந்தியாவுக்கு மேலே பல செயற்கைக்கோள்கள் எப்போதும் வானில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் பலனாக நாட்டின் எல்லாப் பகுதிகளும் தினமும் படம் பிடிக்கப்படுகிறது.
எனினும் இப்போதைய கார்ட்டோசாட்-2 செயற்கைக்கோளின் பிரதான நோக்கம் நாட்டின் பல பகுதிகளின் துல்லியமான மேப்புகளைத் தயாரிப்பதற்கான வகையில் படங்களை அளிப்பதாகும். ஜி.பி.எஸ். டெலிபோன், குரூஸ் ஏவுகணை ஆகியவை வந்த பின்னர் குறிப்பாகப் பாதுகாப்புத் துறையினருக்கு மிகத் துல்லியமான மேப்புகள் தேவைப்படுகின்றன.
posted by Norsri @ Wednesday, January 10, 2007  
பிரதான செய்திகள்
பெட்டகம்
இணையசெய்திகள்
தொலைக்காட்சிகள்
வானொலிகள்
குழந்தைப் பெயர்கள்
தொழில்நுட்பம்
பாடசாலை தளங்கள்
அறுசுவை
MP3 பாடல்கள்
திருமண தளங்கள்
குழந்தைகளுக்கானபக்கம்
கவிதைகள்
தமிழ் சஞ்சிகைகள்
சினிமா பக்கங்கள்
சமூக இணைப்புகள்
நடிகர்கள் தளங்கள்
  • விளம்பரம்
  • கம்ப்யுட்டர் கல்வி
    நான் பார்ப்பவை



    free web counter

    Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

    Listed in tamizmaNam.com, 
 where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    More than a Blog Aggregator


    BLOGGER