Notify Blogger about objectionable content.
What does this mean?
Send As SMS
BlogThis!
இணைந்து இருங்கள்
[Eurobird 9] Star Vijay TV has launched in Europe again on Eurobird 9A (9 degree East)
தமிழர் தாயகப் பிரிப்பு பெரும் சந்தேசகத்தை ஏற்படுத்தியுள்ளது - ஜெயானந்தமூர்த்தி
24 December 2006
வடகிழக்கு மாகாணத்தை பிரித்து வடக்குக்கு வேறாகவும் கிழக்குக்கு வேறாகவும் இரு நிருவாக அலகுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் திருகோணமலை மாவட்டத்தை மாத்திரம் கிழக்கிலிருந்து வேறாக்கி தனி நிருவாக அலகு உருவாக்கப்பட்டுள்ள செயலானது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் தமிழர் தாயகத்தைத் துண்டாடும் சிங்கள பேரினவாதத்தின் ஒரு திட்டமிட்ட செயலாகுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றவென்றே மாகாணசபை முறைமை சிறிலங்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 1987 ஆம் ஆண்டு அப்போதைய சிறிலங்கா ஐனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் இந்திய பிரதமர் ராஐPவ் காந்தியும் செய்து கொண்ட இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற வகையில் மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டது. இதன்பிரகாரம் தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு வடகிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டது.
ஆனால் அந்த மாகாணசபை திட்டம்கூட யாருடைய பிரச்சினையைத் தீர்ப்பதற்காக முன்வைக்கப்பட்டதோ அதன்படி தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்குவம் வகையில் அது செயற்படவில்லை. மாறக சிறிலங்காவில் வடகிழக்கு மாகாணத்தைத் தவிர எனைய பகுதியில்தான் அது சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் வடகிழக்கு மாகாணசபைக்கு சிங்கள ஆளுனர் நியமிக்கப்பட்டு சிறிலங்கா அரசின் நேரடி கண்காணிப்பில் அது இயங்கியதுடன் தமிழ் மக்களின் எந்தவொரு அபிலாசசைகளையும் இம்மாகாணசபை நிறைவேற்றவில்லை. இதனால் மாகாணசபை முறையில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்தவர்களாக இருந்தனர்.
இந்த வகையில் வடகிழக்கு தாயகத்தை கூறு போடும் சிங்கள பேரினவாதத்திட்டத்தின் படி ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவின் அனுசரணையுடன் வடகிழக்கு மாகாணம் இரு மாகாணங்களாக பிரிக்கப்பட்டு தற்போது அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு எதிர்வரும் ஐனவரி மாதத்துடன் நிருவாக அலகுகள் இயங்கவுள்ளன. எனினும் கிழக்கு மாகாணத்திலிருந்து திருகோணமலை மாவட்டம் தனி அலகாகப் பிரிக்கப்பட்டு தனி நிருவாக அலகு உருவாக்கப்பட்டுள்ளது. இது தமிழர் தாயகத்தைத் துண்டாடும் பாரிய சதி என்பதுடன் தமிழர் தாயகத்தின் தலைநகரை சிங்கள மயமாக்கும் ஒரு நடவடிக்கையாகவும் உள்ளது.
சிறிலங்கா அரசின் இந்த நடவடிக்கையானது எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுடன் திருகோணமலை மாவட்டத்தை எதிர்காலத்தில் வடமத்திய மாகாணத்துடன் இணைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதனால் சிறிலங்கா அரசு தற்போது அவசர அவசரமாக வடகிழக்கு மாகாணத்தைத் துண்டாடி மூன்று நிருவாக அலகுகள் அமைத்துள்ள நடவடிக்கையானது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் தற்போதைய இனப்பிரச்சினைத் தீர்வானது இதனால் இன்னும் மோசமடையக் கூடிய நிலையே தோன்றும் என்பதுடன் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை ஏற்படுத்திய பிரதான சக்தியான இந்தியாவின் நோக்கத்தையும் சிதறடிக்கும் செயலாகவும் உள்ளது. ஏனெனில் வடகிழக்கு மாகாணம் இணைந்திருக்க வேண்டும் என்பதையே தற்போதும் இந்தியா வலியுறுத்தி வருகின்றது. இதை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சிறிலங்கா ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவிடம் அண்மையில் வலியுறுத்தியிருந்தார்.
அத்துடன் தமிழ் மக்களின் எந்தவொரு கருத்தையும் கேட்டறியப்படாமல் இவ்வாறு வடகிழக்கு மாகாணம் கூறுபோடப்படுவதை தமிழ் மக்கள் முற்றாக எதிர்த்துள்ளதுடன் கிழக்கு மாகாண மக்கள் இணைந்த வடகிழக்கு தாயகமே தமது பூர்வீகத்தாயகம் என்பதில் உறுதியாக உள்ளதுடன் வடகிழக்கு இணைந்தே இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.
posted by Norsri @
Sunday, December 24, 2006
பிரதான செய்திகள்
மதியுரைஞரின் இறுதி நிகழ்வுகள்
தமிழர் தாயகத்தில் மூன்று நாள்களுக்கு தேசிய துக்கதின
பாலாண்ணைக்கு "தேசத்தின் குரல்" கௌரவம்: தமிழீழத் தே...
இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரே தீர்வு அரசியல் தீர்வே..
ஏ-9 திறக்காவிட்டால் நடவடிக்கை எடுக்க புலிகள் முடிவு.
உணவுப் பொருட்கள் முற்றாக தீர்ந்தன...
நாடாளாவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பு
சிறீலங்காவில் ஊடக சுதந்திரம் பாதிப்பு..
தேசிய விருதுக்கு ஈ படம்,
சிவாஜி படப்பிடிப்பு: ரஜினி, ஸ்ரேயா அமெரிக்கா பயணம்
பெட்டகம்
இணையசெய்திகள்
நிதர்சனம்
தமிழ்நாதம்
பதிவு
அதிர்வு
யாழ் இணையம்
நெருடல்
ஈழம் நியூஸ்
சங்கதி
வெப் உலகம்
இணையம்
தொலைக்காட்சிகள்
தீபம்
ரிவி ஐ
லங்காஸ்ரீ ரிவி
சக்தி ரிவி
தமிழ் விசன்
சிகரம் ரிவி
தமிழ் ரிவி
வானொலிகள்
ஐ.பி.சி தமிழ்
புலிகளின் குரல்
உலகத் தமிழோசை
சக்தி எஃப்.எம்
கனேடிய தமிழ் வானொலி
அவுஸ்திரேலிய தமிழ் ஒ..கூட்டு..
தாளம்
குழந்தைப் பெயர்கள்
தமிழ் பெயர்கள்
தமிழ் பெயர்கள்
தமிழ் பெயர்கள்
தமிழ் பெயர்கள்
தொழில்நுட்பம்
vaddakkachchi
technocadd
java sun
wntechnology
பாடசாலை தளங்கள்
ஹாட்லி கல்லூரி
யாழ். இந்துக் கல்லூரி
திருகோணமலை இந்துக்
kokuvilhindu
Universities
stpatrickscollege
Jaffna Hindu
அறுசுவை
அறுசுவை
அறுசுவை
அறுசுவை
MP3 பாடல்கள்
MP3
MP3
MP3
MP3
திருமண தளங்கள்
திருமண தளங்கள்
குழந்தைகளுக்கானபக்கம்
தமிழ் கற்பதற்கு
தமிழ் கற்பதற்கு
கவிதைகள்
kavimalar
kavithai
தமிழ் சஞ்சிகைகள்
வீரகேசரி
உதயன்
ஈழநாடு
சுடர் ஒளி
நக்கீரன்
சினிமா பக்கங்கள்
சினிமாமலர்
தமிழ் சினிமா
சினிமா சௌத்
இம்சை அரசன்
சமூக இணைப்புகள்
தமிழ்ச் சமூகம்
தமிழ் Stepith
நடிகர்கள் தளங்கள்
vikram
Surya
Arjun
Vijaykant
Vijay
Ajith >
விளம்பரம்
கம்ப்யுட்டர் கல்வி
இணைய மொழி
இன்டர் நெட்
நான் பார்ப்பவை
© proudly powered by 2006.
norsri.blogspot.com
நீங்கள் இந்த வலைக்கு
பார்வையாளராக வருகை நன்றி.