இணைந்து இருங்கள்

 
[Eurobird 9] Star Vijay TV has launched in Europe again on Eurobird 9A (9 degree East)


மனிதாபிமான அடிப்படையில் இந்தியா உதவ வேண்டும்...
09 November 2006


இலங்கைத் தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா உதவ வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சொந்த நாட்டு மக்களையே யாழ்ப்பாணத்தில் இலங்கை அரசு முற்றுகை இட்டுள்ளது. அங்குள்ள லட்சக்கணக்கான மக்கள் உணவு மருந்து இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்துக்கு செல்லும் ஒரே நெடுஞ்சாலைப்பாதையையும் இலங்கை இராணுவம் முடக்கி வைத்துள்ளது. தமிழர் பகுதிகளை முப்படை கொண்டு இலங்கை அரசு தாக்கி வருகிறது. மேலும் முக்கிய உணவுப் பொருட்களை செல்ல விடாமல் தடுக்கிறது. இதன் மூலம் தமிழ் இனப்படுகொலையை செய்து வருகிறது. இலங்கை அரசின் காட்டுமிராண்டித்தனமான இப்போக்கை தடுத்து நிறுத்தி அங்குள்ள தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ இந்தியா முன்வரவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணத்தில் இருந்து தனது இராணுவத்தை இலங்கை அரசு திரும்பிப்பெற இந்திய அரசு வற்புறுத்த வேண்டும். தமிழர் பகுதிகளில் அமைதி ஏற்படவும் அங்கு பேச்சுவார்த்தை மூலம் நியாயமான தீர்வு காணவும் இலங்கை அரசை இந்தியா வற்புறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
posted by Norsri @ Thursday, November 09, 2006  
பிரதான செய்திகள்
பெட்டகம்
இணையசெய்திகள்
தொலைக்காட்சிகள்
வானொலிகள்
குழந்தைப் பெயர்கள்
தொழில்நுட்பம்
பாடசாலை தளங்கள்
அறுசுவை
MP3 பாடல்கள்
திருமண தளங்கள்
குழந்தைகளுக்கானபக்கம்
கவிதைகள்
தமிழ் சஞ்சிகைகள்
சினிமா பக்கங்கள்
சமூக இணைப்புகள்
நடிகர்கள் தளங்கள்
  • விளம்பரம்
  • கம்ப்யுட்டர் கல்வி
    நான் பார்ப்பவை



    free web counter

    Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

    Listed in tamizmaNam.com, 
 where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    More than a Blog Aggregator


    BLOGGER